மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் போரிஸ் ஜான்சன் நலமாக இருப்பதாகத் தகவல்..!!
கொடிய கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் வெண்டிலேட்டர் வைக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொரு அறிகுறிகள் காணப்பட்டதால் அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரின் செய்தித் தொடர்பாளர், மருத்துவமனையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக இருப்பதாகக் தெரிவித்துள்ளார். நிம்மோனியா அறிகுறிகள் ஏதும் அவருக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் வைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.