ஸ்பெயினில் வீதி எங்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவம்..!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இத்தாலிக்கு அடுத்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டில் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மார்ச் 14 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீட்டித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பேருந்து நிறுத்தம், மருத்துவமனை போன்ற பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து வரும் இராணுவ வாகனம், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.