ஊரடங்கு சட்டத்தை அவசரப்பட்டு நீக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில் அதை அவசரப்பட்டு நீக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை அதிகளவில் சந்தித்த அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகையால், கட்டுப்பாடுகளை தளர்ப்பது தொடர்பாக மாகாணங்களே முடிவு செய்யலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுக்கு உலக சுகாதார மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என்றும், அது, கொரோனா பரவலை தலைதூக்க செய்து விடும் என்றும் அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.