அமெரிக்காவின் செயற்பாடுகளை நன்கு அவதானிக்கும் ஈரான்..!!
அமெரிக்காவின் செயற்படுகளை நன்கு ஆவதானித்து வருவதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பொருளாதாரத் தடை காரணமாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா வழங்கிய மருத்துவ உதவிகளை ஈரான் ஏற்க மறுத்துவிட்டது.
எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா முற்றாக நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போதைய சூழல் தொடர்பாக ஈரான் ஜனாதிபதி கத்தார் இளவரசர் ஷேக் தம்மிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். குறித்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நன்கு அவதானித்து வருவதாகவும், எனினும் பிராந்தியத்தில் நாங்கள் மோதலை தொடங்க மாட்டோம் என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன