அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அறிவிப்பு..!!
கொடிய கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை வழங்கும் வகையில், பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர்கள் வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். செயற்கை சுவாச கருவியான வெண்டிலேட்டர் தேவை உள்ள நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்கா உதவும் என்று கூறியதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் தெரிவித்தார்.
அந்த வகையில், பாகிஸ்தான், ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வெண்டிலேட்டர் இலவசமாக கொடுக்கப்படுகிறதா அல்லது விலைக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்த தகவல் எதுவும் வழங்கவில்லை.என கூறப்படுகிறது.