அவுஸ்திரேலியாவில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வு..!!
அவுஸ்திரேலியாவில் ஒரு மாத ஊரடங்கு சட்டம் அமுலுக்கு பின்னர் கட்டுப்பாடுகளில் சில தளர்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் உலக புகழ் பெற்ற மாநிலமான சிட்னியில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அங்கு பரவலாக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் புதிய பாதிப்புகளை தடுக்கும் என்ற நம்பிக்கையில் மேலும் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதே போல் அவுஸ்திரேலியாவின் அதிக பாதிப்புகளை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பொதுமக்கள் பிறரது வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே அடங்கியிருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதில் தளர்வு வழங்கப்பட்டு குழந்தைகள் அல்லாமல் பெரியவர்கள் இருவர் மட்டும் பிறரது வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.