உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டுகிறதா அமெரிக்கா..!!
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு தங்களை தவறாக வழிநடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா விவகாரத்தில், சம்மந்தம் இல்லாதவர்களுக்கே தெரிந்த பிறகு தான் உலக சுகாதார அமைப்புக்கு பல விஷயங்கள் தெரியவந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்புக்கு தெரியாத பல விஷயங்கள் தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும், ஒன்று அவர்களுக்கு இந்த விஷங்கள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்ததை மறைத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் கை பொம்மை போல மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 400 மில்லியன் டொலர்கள் முதல் 500 மில்லியன் டொலர்கள் வரை அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாகவும், சீனாவோ வெறும் 38 மில்லியன் டொலர்கள் மட்டுமே நிதியுதவி வழங்குவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.