மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலோ அல்லது பாடசாலைகளிலோ தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கவில்லை – கமல் குணரத்ன
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலோ அல்லது பாடசாலைகளிலோ தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் வழங்கவில்லை என பாதுகாப்பு அமைசை்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொடிய கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பொது மக்களும் எதிர்கட்சியினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன. கொரோனோ பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்களைப் பாராமரிப்பதற்கு தனிமைப்படுத்தல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் கூறியிருந்தன. தனிமைப்படுத்தல் நிலையங்கள் என்பது சனநடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.