மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை தான் ஆதரிப்பதாலேயே அதற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது – டோனால்ட் டிரம்ப்
மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை நான் ஆதரிப்பதாலேயே அதற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காப்புக்காக மலேரியா தடுப்பு மருந்தை தான் உட்கொள்வதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதற்கு மருத்துவர்கள் பலரும் எதிர்ப்பு கூறியதோடு, கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஜனதிபதி டிரம்ப், மலேரியா தடுப்பு மருந்தை சாப்பிடுவது தனது தனிப்பட்ட முடிவு என கூறியுள்ளார். மேலும் இது சக்தி வாய்ந்த மருந்து எனக் கூறியுள்ள அவர், எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்றும், தனக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். டிரம்ப் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்கள் தான் இந்த மருந்துக்கெதிரான கருத்துகளையும் கூறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.