கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை பரிசோதனை செய்யும் பிரிட்டன்!
கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை கொடுத்து சோதிக்கவுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சையில் ரெம்டெசிவர் என்ற மருந்தை கொடுத்தால் நோயாளிகள் 4 தினங்களுக்கு முன்னரே குணமடைந்து விடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா சிகிச்சையின் போது செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்து கூட்டு மருந்தாக வழங்கப்படும் போது நல்ல பலன் கிடைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அதன் தயாரிப்பாளரான ஜிலேட் சயன்சஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த சோதனை சிகிச்சை முறையை மேற்கொள்ளவுள்ளது.