பெல்ஜியம் இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா தொற்று உறுதி!
பெல்ஜியம் நாட்டின் இளவரசர் 28 வயதுடைய ஜோசிம் என்பவர் கடந்த 26 ஆம் திகதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சென்ற 2 தினங்களுக்கு பின்னர் கார்டோபா நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் 27 பேர் கலந்து கொண்டனர். அங்கு கொரோனா வைரஸ் தொற்று தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள விதி முறைகள் படி 15 பேர் தான் கலந்து கொண்டிருக்க வேண்டும். இந்த விதிமுறை அந்த விருந்தில் மீறப்பட்டுள்ளது.
குறித்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அங்கு தான் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர். குறித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த விருந்து நிகழ்ச்சிக்கு அங்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ஸ்பெயின் அரசு பிரதிநிதி ரபேலா வேலன்சூலா, இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் பொறுப்பற்றவர்கள் என சுற்றம் சுமத்தியுள்ளனர். கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள
பெல்ஜியம் இளவரசர் ஜோசிம்முக்கு, ஸ்பெயினில் ஒரு பெண்ணுடன் நீண்ட கால உறவு இருப்பதாக ‘விக்டோரியா ஆர்டிஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதும், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
.