தொடர்ந்து வயிற்று வலியால் துடி துடித்து வந்த 14 வயது சிறுமி..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் தெற்கு காஷ்மீரை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் துடி துடித்து வந்தார். இதனால் தந்தை சிறுமியை அழைத்துக் கொண்டு மந்திராவாதியிடம் சென்றுள்ளார். அவர் எதோ பூஜையெல்லாம் செய்த நிலையிலும் சிறுமிக்கு வயிற்று வலி குறையவில்லை தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலியால் துடி துடித்தார். அதையடுத்து பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மருத்துவர் கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது தொடர்பாக பொலிசில் புகார் கொடுத்தனர். சிறுமியை பொலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் வீட்டருகில் வசிக்கும் அவரின் 35 வயதுடைய உறவினர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சிறுமி தனியாக இருக்கும் போது மயக்க மருந்து கலந்து கொண்டு அவரை தொடர்ந்து சீரழித்து வந்தார். இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார், இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி பொலிசில் வாக்கு மூலமாக அனைத்தையும் கூறிய நிலையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.