ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! 14 பேர் பலி..!!
ரஷ்யாவின் கடற்படை ஆராய்ச்சி நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 14 மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடடார். கடந்த திங்கட்கிழமை ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் வைத்து கப்பல் அளவீடுகளை இடம்பெற்ற போது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலின் வகை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு எந்தவொரு விபரங்களையும் தெரிவிக்கவில்லை.
தீ விபத்தில் எரிந்த கப்பல் விசேட நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் அணு சக்தியினால் இயங்கக் கூடிய சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் மொத்தமாக எத்தனை கடற்படை உறுப்பினர்கள் அதில் இருந்தார்கள் என்பது பற்றி அமைச்சு தகவல் வௌியிடாத போதும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாலுமிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தீ விபத்தினை தொடர்ந்து குறித்த நீர்மூழ்கி ரஷ்யாவின் வடக்கு கடற்பிராந்தியத்தில் உள்ள செவிரோமோர்ஸ்க் கடற்படை முகாமில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடற்படை தளபதியின் தலைமையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.