இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரைக்கும் நீர்வெட்டு..!!
இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய நீர்பாவனையாளர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும் இன்று நள்ளிரவு 12 மணி வரைக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட இடங்களில் கொச்சிக்கடை, துவ, பிட்டிபன, பாசியாவத்தை, துன்கல்பிட்டி, பமுனுகம, மற்றும் கட்டான போன்ற இடங்களுக்கும் கட்டுநாயக்கா முதலீட்டு அபிவிருத்தி வலய பகுதி, கட்டுநாயக்க விமான நிலையம், கட்டுநாயக்க விமானப்படை முகாம் போன்றவற்றிக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பம்புகுளி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.