இந்தோனேசியாவைச் சேர்ந்த கணித ஆசிரியர் 15 வயது மாணவியை மானபங்கப்படுத்தினார்..!!
இந்தோனேசியாவைச் சேர்ந்த 48 வயதுடைய கணித துணைப்பாட வகுப்பு ஆசிரியர் 15 வயது மாணவியை 5 முறை மானபங்கப்படுத்தினார். மேலும் இந்த ஆசிரியர்க்கு 25 மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆசிரியர் சிங்கப்பூர் நிரந்தரவாசியாவர்.
மேலும் இந்த கணித வகுப்புகளுக்குப் பின் வீட்டுப்பாடத்தில் உதவுவதாகக் கூறி மாணவியைப் தங்குமாறு ஆடவர் சொல்லி இருந்தார். அத்தகைய தருணங்களில் அவர் மாணவியை மானபங்கம் செய்திருக்கிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் மாணவி கூறியிருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தால் மாணவியின் கல்வி பாதிக்கப்பட்டதாகவும் வழக்கு அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பலவந்தமாக மாணவியை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை கணித துணைப்பாட ஆசிரியர் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். மேலும் இரு குற்றச்சாட்டுகளைக் கருத்திற்கொண்டு அவருடைய தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆடவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.