சிங்கப்பூர் தனது 4 Airbus A380 ரக விமானத்தின் சேவைத்தரத்தை உறுதிப்படுத்த சோதனை..!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 4 Airbus A380 ரக விமானங்களில் சோதனை நடத்தி, சேவைத்தரத்தை உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
CNAவின் கேள்விக்குப் பதிலளித்த போது விமான நிறுவனம் இன்று அதனைத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆகாய போக்குவரவுப் பாதுகாப்பு அமைப்பின் பரிந்துரை கடந்த வாரம் வெளியானது.
irbus A380 ரக விமானங்களின் இறக்கைப் பகுதியில் இடைவெளி இருப்பதால் அவை சேவை வழங்கும் தரத்தில் இருப்பதை விட அதிகமாக உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
2004ஆம் ஆண்டுக்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடையில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு அது பொருந்தும்.
விரிசல்களை அடையாளம் கண்டு திருத்தா விட்டால் விமான இறக்கையின் கட்டமைப்பு சீர்குலையக்கூடும் என்று அமைப்பு தெரிவித்தது. மேலும் பயணிகள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முக்கிய முன்னுரிமை அளிப்பதால் அதன் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் 25 விமானங்களில் சோதனை நடத்தப்படும். ir France, Lufthansa, Emirates, Qantas போன்ற விமான நிறுவனங்களும் Airbus A380 ரக விமானங்களைப் பயன்படுத்துகின்றன