நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட இளம் ஜோடிகள்..!!! அதிர்ச்சியில் விமான பயணிகள்..!!
அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானம் பறந்து சென்ற போது அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் அவ் விமானத்தில் பயணித்த இளம் ஜோடி ஒன்றுக்கு வானில் பறக்கும் போது வித்தியாசமான ஓர் ஆசை தோன்றியது.
பறக்கும் விமானத்தில் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனும் மனநிலை. இந்த தம்பதியினர் ஒன்றாக விமான கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் இருவரும் ஒரே வேளையில் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று விமான பணியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கழிப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தம்பதியினர் நடுவானில் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போதே செக்ஸ் உறவை மேற்கொள்ள வேண்டும் என நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் கண்முன் உடலுறவில் ஈடுபட்ட இளம் தம்பதியினரின் செயல் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவர்கள் செக்ஸ் மீது அதீத ஆர்வம் உள்ளவர்கள் போல் இடம் பொருள் பாராமல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உடலுறவின் ஆசையை அடக்க முடியாத அவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே தங்களது வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த நிலையில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில்
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இருந்தும் அவர்கள் இச் செயற்பாட்டை நிறுத்தவில்லை.
விமானப் பணிப் பெண்கள் அவர்களிடம் போய் இவ்வாறு செய்யக்கூடாது முதலில் இதை எல்லாம் நிறுத்துங்கள் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் செய்யும் செயலை நிறுத்துவதாக இல்லை. இதன் போது குழந்தைகளுடன் வந்த மற்ற பயணிகளுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.
இதை தொடர்ந்து அவர்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டனர். அதன் பின்பும் அவர்கள் உடலுறவில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் விமானப்பணி பெண்கள் அவர்களை சுற்றி துணி கட்டி அவர்கள் செய்வது மற்றவர்கள் காணாத படி பார்த்துக்கொண்டனர்.
பின்பு விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் அவர்களை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் கண் முன்னே தம்பதிகள் இவ்வாறு உறவில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சி அடையச்செய்தது.