நள்ளிரவில் பெண் பத்திரிகையாளருக்கு நடந்த கொடுமை..!! வைத்தியசாலையில் அனுமதி..!
பிரபல பெண் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ஒன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது. நொய்டாவை சேர்ந்த மிதாலி என்ற குறித்த பெண் பத்திரிகையாளர் நள்ளிரவு டெல்லியை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முக்கிய வேலை ஒன்றிற்காக மிதாலி காரில் சென்றுகொண்டிருந்த போது நள்ளிரவு 12.30 மணியளவில் இவரது காரின் மீது முட்டை மற்றும் கற்களை வீசியுள்ளனர். ஆனால் மிதாலி கண்டுகொள்ளாமல் வாகனத்தை வேகமாக செலுத்தியுள்ளார்.
பின் தொடர்ந்த மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மிதாலியின் கையில் வெடி பட்டுள்ளது. பொலீஸ் நிலையம் சென்ற மிதாலி தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.!
இது தொடர்பாக பொலீஸார் தெரிவிக்கையில் மிதாலியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த அவரது குடும்பத்தை சார்ந்தவர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக கூறியுள்ளனர்..!