வெளியானது ரஞ்சனின் மற்றொரு சர்ச்சை உரையாடல்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேறு சில சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரைக் கைது செய்வது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானி ரவி வித்யாலங்கார ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் தொலைப்பேசி உரையாடலே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இந்தக் குரல் பதிவு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவால் வெளியிடப்பட்டது.
அதேபோல மற்றும் சில குரல் பதிவுகளை சிங்களே அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில், ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதானி ரவி வித்யாலங்கார ஆகியோர் பேசியது இடம்பெற்றது எனக் கூறப்படுகிறது.
இந்தக் குரல் பதிவிலும் பசில் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரைக் கைது செய்யும் வகையிலேயே உரையாடல் அமைந்துள்ளது.