ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காவல்துறையினருக்கு விடுத்த மகிழ்ச்சியான செய்தி.!
ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்த முதல் நாளிலேயே அதிரடியான பல திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் ஒன்றான ஆந்திர பொலிஸ் நிலையத்துக்கு உற்ப்பட்ட அனைத்து காவலர்கள் தொடக்கம் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு கூறியுள்ள அறிக்கையில், இந்த புதிய திட்டத்தின் மூலம், 67, 804 காவல்த்துறையினர் நன்மை பெறுவார்கள் எனவும் ஆந்திராவில் காவல்துறையினருக்கு விடுமுறை கொடுக்கும் திட்டம் இன்று முதல் வழமைக்கு வந்துள்ளது என குறிப்பிட்டார்.
சென்ற நாட்களுக்குமுன்பு ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு 15 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார் ஜெகன் மோகன் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாராயக்கடைகளை வெளியேற்றவும் என கூறினார். ஆந்திராவில் அதிரடியாக வரும் ஜெகன் மோகன் ரெட்டியை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.