மாணவி கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், கோரிக்கையை மகஜராகக் கையளித்த மாணவர்கள் !
சுழிபுரம் கல்லடிப்பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவியான ரெஜினாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் யாழ்ப்பாணம் முழுவதிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற அதே வேளை சுழிபுரத்தில் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்த மாணவியின் உறவுகள், சுற்றம், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் இன்று வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.
சுழிபுரத்தில் மாணவியின் படுகொலையைக் கண்டித்து இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் முதலில் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் பின்பு அங்கிருந்து யாழ் நகர் சென்று மாகாண ஆளுநர், அரசசாங்க அதிபரிடமும் மகஜரைக் கையளித்துள்ளனர்.
இந்த மகஜரில் மாணவியின் படுகொலைக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.