கண்ணை சுற்றி கருவளையமா.? இதோ நொடியில் நீக்கும் அற்புத மருத்துவம்.!!
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றும் சூப்பரான அழகு குறிப்புடன் உங்களை சந்திப்பது உங்கள் தோழி. இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது கண்களை சுற்றியுள்ள கரு வளையத்தை எப்படி போக்கலாம் மற்றும் கரு வளையம் வர காரணம் என்ன என்று தான்.
இன்றைய காலத்தில் 24 மணி நேரத்தில் ஆகக்குறைந்தது 10 மணி நேரமாவது கணினி அல்லது மொபைலில் எம் நேரம் செல்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் ஒரே விடயத்தை செய்வதால் கருவளையம் வருகின்றது. அது மட்டும் இன்றி உறக்கம் இன்மை, மட்டும் இன்றி அதிகம் உறங்குவது கூட கண்ணை சுற்றி கரு வளையம் வர காரணமாகிறது.
சரி இதனை எப்படி சரி செய்வது என பார்க்கலாம். முதலில் வெள்ளரிக்காய் ஒரு பாதி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக சீவி சுத்தப்படுத்தி பின் வெள்ளரிக்காயை நசுக்கி சாறு எடுங்கள். அடுத்து கற்றாலை ஜெல் இரண்டு கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பார்மசிகளில் கிடைக்கும் விட்டமின் ஈ மாத்திரை நான்கை எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது எடுத்து வைத்திருக்கும் வெள்ளரி சாற்றுடன் கற்றாலை ஜெல், விட்டமின் ஈ டாப்லட் மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது கரு வளையத்தை நீக்கும் மருந்து தயார்.
இதனை சிறிய போத்தலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் உறங்க செல்லும் முன் இதனை கீழ் உள்ள வீடியோவில் இருப்பது போல் பூசி உறங்குங்கள். கரு வளையம் சீக்கிரமே மறைந்துவிடும்.
இந்த கலவை 12 நாட்கள் வரை பாவிக்கலாம்.!பிடித்தால் பகிருங்கள்..!