நடுவீதியில் நபர் ஒருவரை ஏறிமிதித்து கொடூரமாக தாக்கிய போக்குவரத்து பொலீஸ் அதிகாரி.! இலங்கையில் இன்று நடந்த கொடூர சம்பவம்..இதோ வைரலாகும் வீடியோ.!!
இலங்கையில் போக்குவரத்து பொலீஸ் அதிகாரி ஒருவரின் மோசமான செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. நடுவீதியில் இளைஞர் ஒருவரை தூக்கி கீழே போடும் குறித்த பொலீஸ் அதிகாரி இளைஞர் கீழே விழுந்ததும் அவர் மீது ஏறி குதித்து தாக்குகிறார், அப்படி தாக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மக்கள் உடனடியாக குறித்த போக்குவரத்து பொலீஸ் அதிகாரியின் வேலையை பறிக்க வேண்டும் என்றும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
குறித்த தாக்குதலுக்கான காரணம் சரியாக தெரியாவிட்டாலும் வீதி விபத்து ஒன்றை ஏற்படுத்தியதால் பொலீஸ் அதிகாரி இளைஞரை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகள் மறுக்கப் படுகிறது, மனித உரிமைகள் மீளப்படுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் அதனை உறுதிபடுத்தி வருகிறது.
இதோ வைரலாகும் வீடியோ.!!