சிங்கப்பூரில் நீதிமன்ற விசாரணை 10 நிமிட இடைவேளையின் போது காணாமல் போன ஆடவர்..!!!
சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்றில் விசாரணை இடைவேளையின் போது காணாமல் போன ஆடவர் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோல் நிலையத்தில் ஆயுதமேந்திக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட 50 வயதுடைய விஸ்வநாதன் வடிவேலுவின் தண்டனையை அரசு நீதிமன்றம் சென்ற செவ்வாய்க்கிழமை அறிவிக்கவிருந்தது. அப்போது அங்கு நடந்த விசாரணையில் 10 நிமிட இடைவேளையின் போது அவர் காணமல் போயுள்ளார்.
அதையடுத்து நீதிபதி அவரைக் கைது செய்யவும், அவரது 70,000 வெள்ளி பிணையை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.
பகல் நேரத்தில் ஆயுதமேந்திக் கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 வருடம் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.