இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை கைது..!!!
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 42 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் நேற்ரையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா அனுமதிப் பத்திரம் இன்றி கொட்டாஞ்சேனை- சுமனதிஸ்ஸ மாவத்தையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார். மேலும் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.