தீ பரவுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய கதவுகள் குறித்து விசாரணை..!!!
சிங்கப்பூரில் ஏற்படும் திடீர் தீ விபத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய கதவுகள் என்று SETSCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 2,000 கதவுகளின் தரம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் வெளிப்புறத்தில் தீ பரவாமல் தடுப்பதற்கு இந்த கதவுகள் உதவுகின்றன. இதுவரைக்கும் SETSCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 99 கதவுகள், தீப்பாதுகாப்புத் தரநிலையை எட்டவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை இன்று வெளியிட்ட அறிக்கையில், கதவுகள் வீடுகளில் பொருத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. தரநிலைக்கு உட்படாத கதவுகளைக் கொண்ட கட்டடங்கள் பாதுகாப்பானவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரநிலைக்கு உட்படாத கதவுகளைக் கொண்ட கட்டடங்கள் பாதுகாப்பானவை என்றும் அறிக்கையில் கூறப்பட்டது. அந்த கதவுகளை மாற்ற நிறுவனத்துக்கு 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. SETSCO நிறுவனம் வகுத்துள்ள தரநிலைகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன.
நிறுவனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கதவுகளில் SETSCOவின் ஒட்டுவில்லைகள் ஒட்டப்படாமலிருப்பதும் தெரியவந்துள்ளது. கதவுகள் தயாரிக்கப்பட்ட இடம், முன்பு குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து மாறுபட்டிருந்ததையும் சிலர் சுட்டினர்.
கதவுகளின் வடிவங்களும் அவற்றை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் சொல்லாமல் மாற்றப்பட்டிருந்ததையும் சிலர் தெரிவித்துள்ளார். போலியான பத்திரங்களைச் சமர்ப்பித்து ஒட்டுவில்லைகள் பெறப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.