இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைக்கு அடுத்த வருடம் இலவசமாக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்..!!!
இலங்கையில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் எதிர்வரும் ஆண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் இலவசமாக கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. .
மேலும் இந்த தகவலை சுகாதார போஷாக்கு, சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார். களுத்துறையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை 10500 இற்கும் அதிகமான ஸ்டென்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதன்மூலம் பைபாஸ் எனப்படும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பாரிய நன்மை கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.