கோடை காலத்தில் உங்க வீட்ல கற்றாழை இருக்கா..!? அப்பிடீன்னா நீங்க கோடீஸ்வரர் தான்.! ஏன் தெரியுமா இத படியுங்கள் புரியும்..!!
கற்றாழை என்பது நாம் வீட்டிலேயே இலகுவாக வளர்க்கக் கூடிய செடியாகும். ஆனால் அது கொண்டுள்ள மருத்துவ குணங்களும் அதன் பயன்பாடுகளும் அளப்பரியவை. சோற்றுக் கற்றாழையின் இலையை எடுத்து முள்ளை நீக்கி இரண்டாப் பிளந்து உள்ளே உள்ள ஜெல்லை இரவு வேளையில் முகத்தில் தேய்த்துக் கொள்ளவேண்டும். காலையில் வெந்நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமையானது படிப்படியாக நீங்கும்..
கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள ஜெல் (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும்.
இதனால் உடல் சூடும், எரிச்சலும் குறையும்.தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பிசத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ளகொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன்கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம்வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும்.கற்றாழையை முள்ளை அகற்றி பிளந்து அந்த ஜெல்லை தலையில் நன்றாக சூடுவரத் தேய்க்கவேண்டும்.
பின் இரண்டு மணிநேரம் கழித்து சீகைக்காய், வெந்தயம் கலந்த பொடியைத் தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். இதனால் தலையில் உள்ள படை, பொடுகு போன்றவை நீங்குவதோடு தலைமுடி உதிர்வதும் நிற்கும்.கற்றாழையைத் தீயில் வாட்டி பிழிந்து சாறு எடுத்து பின்னர் அந்தச் சாற்றை சூடு ஆற்றி பொறுத்துக்கொள்ளும் மிதமான அளவில் வந்தபின் காதில் இரண்டு மூன்று சொட்டுக்களை விட்டு பஞ்சு வைத்து அடைத்துவிடவேண்டும்.
காதுவலி குணமாகிவிடும்.கோடை காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். இதன்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் ஜெல் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.