மைத்திரி – பிரதமர் மஹிந்தவின் புதிய கூட்டணி! சந்திரிக்காவின் திடீர் திருப்பத்தால் அரசியல் ஏற்படும் மாற்றம்!
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தொடர்ந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகிகயுள்ளது. அண்மையில் நிலவிய அரசியல் நிலைமை தொடர்பாக அவரது ஊடக பிரிவிடம் வினாவிய போது அரசியல் தொடரில் எந்தவொரு கருத்து வெளியிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அண்மையில் நடந்த இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்திற்காக நடைபெற்ற அனைத்து நிகழ்விலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டிருந்தார். அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் ஜனாதிபதி மிகவும் நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார். மேலும் இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சந்திரிக்கா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதன் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.