சிறப்பு அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை 3 துறைகளில் குறைப்பு..!!
சிறப்பு அனுமதி அட்டைகளின் எண்ணிக்கையை கட்டுமானத் துறை, கடல்துறை, பெட்ரோலிய, ரசாயன உற்பத்தித் துறை என முன்றாக குறைக்க தீர்மானித்துள்ளன. இந்த மாற்றத்தின் கீழ் குறித்த துறைகளின் நிறுவனங்கள் அதிகபட்சமாகத் தங்களின் 15 விழுக்காட்டு ஊழியர்களுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அட்டையை வழங்க முடியும்.
தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகபட்சமாக 20 விழுக்காட்டு ஊழியர்களுக்குச் சிறப்பு அனுமதி அட்டையை வழங்க முடியும். எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அந்த விகிதம் 18 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மதம் முதல், அது 15 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
சேவைத்துறைகளிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக அரசாங்கம் கடந்த வருடம் அறிவித்துள்ளது. அதையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும் இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுவதைச் சீர்ப்படுத்துவதோடு சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்தார்.