சிங்கப்பூரில் நாடாளுமன்றக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல கேள்விகள்..!!
சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின் போது கொரோனா வைரஸ் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பவுள்ளன. சீனாவுக்குச் செல்லாத சிங்கப்பூரர்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது வைரஸ் பரவல் தொடர்பாக குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சமூகப் பரவல் தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளன.
இந்த வைரஸ் தொடர்பாக எச்சரிக்கைக் குறியீட்டுக்குத் தகுந்தவாறு பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணி எப்படி வேறுபடும்; சிங்கப்பூர்ப் பொருளியலில் வைரஸ் பரவலின் தாக்கம் போன்றவை தொடர்பாக கேள்விகள் கேக்கவுள்ளனர். அவை தவிர, இரைச்சலை ஏற்படுத்தும் வாகனங்கள் தொடர்பான புகார்கள், PMET எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் – இவர்களை வேலைக்கு அமர்த்துவதில் எத்தகைய துறைகள் சவால்களை எதிர்நோக்குகின்றன போன்ற கேள்விகளும் கேட்கப்படும். யானைத் தந்தம், எறும்பு தின்னி செதில்கள் கடத்தல் தொடர்பில் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் சில கேள்விகள் முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.