கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து மீதான சோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – உலக சுகாதார அமைப்பு
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவது குறித்து மருத்துவ பரிசோதனைகள், மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கொடிய கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உலக நாடுகள் பயன்படுத்தி வந்த நிலையில், மருத்துவ பாதுகாப்பு கருதி அவற்றின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற நிலையில் இது குறித்து பேசியுள்ள அந்த அமைப்பின் தலைவர் அதானோம், கிடைக்கக்கூடிய இறப்பு தரவுகளின் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மீதான சோதனைகளை நிறுத்த, எந்த காரணமும் இல்லை என நிர்வாகக் குழு பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.