மூன்று ஆண்களுடன் உறவு…பெற்ற பிள்ளையை இழந்த தந்தை. பின் நடந்த அதிர வைக்கும் விடயம்..!!
இந்தியாவில் மனைவியின் தகாத செயலால் குழந்தையை இழந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் கல்யாண் ராவ். பஞ்சாயத்து செயலாளராக பணி புரிந்து வந்த இவர் அனுஷா என்ற பெண்ணை 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு காதலின் அடையாளமாக ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின் அனுஷாவிற்கு மொபைல் கடையில் வேலை பார்த்த கருணாக்கர் என்ற நபரின் நட்பு கிடைக்க இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதன் போது கருணாக்கர் ராஜசேகர் என்ற நபரை அனுஷாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ராஜசேகருக்கும் அனுஷாவிற்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதனால் கடுப்பான கருணாக்கர் ராஜேசேகரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப் படும் கத்திகளை எடுத்துக் கொண்டு அனுஷாவின் வீட்டிற்கு சென்று ராஜசேகரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதன் போது ஆத்யா எதிரில் வர அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின் தானும் தற்கொலை முயற்சி செய்துகொண்டுள்ளார்.
ஆனால் அவரை மக்கள் காப்பாற்றி ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் ஆசையாக வளர்த்த மகள் கொலை செய்யப் பட்டதால் தாங்கிக் கொள்ள முடியாததால் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மனைவி செய்த செயலால் குழந்தையை இழந்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…!