அப்பா பெயர் தெரியாவிட்டாலும் அனைவரையும் கவர்ந்த பிரபலங்கள் யார் என தெரியுமா.? பாருங்கள் பகிருங்கள் .!!
தாய் இல்லாமல் வளரும் குழந்தைகள் கூட பெரிதாக கவலை பட அவசியம் இருப்பதில்லை ஆனால் தந்தை இல்லாமல் உலகில் வாழ்வதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.” அம்மா வந்து சொன்னா தான் அப்பா யாரு தெரியுமடா, அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாக தான் போகுமடா” இந்த வரிகளுக்கு ஏற்றது போல் பலர் தந்தை யார் என வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
சிலர் இதனால் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அம்மா, அப்பா செய்த தவறுக்கு பிள்ளைகள் இன்றளவும் கொடுமை அனுபவித்து வருகின்றனர். ஆனால் எத்தனை அவமானங்கள் வந்தாலும் அவற்றை தாண்டி வெற்றிபெற முடியும் என ஒரு சிலர் நிரூபித்துள்ளனர் அவர்கள் பற்றி பார்க்கலாம்.
முதலில் உலக அளவில் அதிகமாக பேசப் படுகின்ற ஒன்லைன் இ.காமர்ஸ் இணையத்தின் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் பற்றி பார்க்கலாம். இவர் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் தனது தந்தையை பார்த்ததே இல்லை. தந்தை பற்றி இவரிடம் கேட்டால் தந்தை இன்றி பட்ட அவமானங்கள் தான் இன்றளவின் என்னுடைய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து “ஸ்டீவ் ஜாப்ஸ்” இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆப்பிள் நிறுவனத்தின் அசையாத நம்பிக்கை இவர் தான். ஆனால் இவருக்கு தாய் தந்தை இருவருமே யார் என தெரியாது. ஸ்டீவ் ஜாப்ஸ் சிறு குழந்தையாக இருந்த போது இவரை பெற்றவர்கள் தத்துக் கொடுத்துவிட்டனர். வளரும் வரை இவர் ஒரு அநாதை என தெரியாது. தெரிந்த பின் தன் தாய் தந்தையை தேடாமல் தன் வளர்ப்பு தாய் தந்தைக்கு உண்மையான மகனாக இருக்கின்றார்.
அடுத்தவர் உலகை கவர்ச்சியால் கவர்ந்த மார்லின் மன்றோ. கஷ்டம் என்பது மறுபெயர் இவர் தான். சிறுவயதில் திருமணம் முடித்துகொடுக்கப் பட்டதால் ஏராளமான கொடுமைகளை அனுபவித்த இவர் திருமண வாழ்வில் இருந்து மீண்டு சினிமாவில் பிரபலமானார். இவரது தந்தை யார் என இதுவரை தெரியாது. இவரது பயாலஜிக்கல் தந்தையாக இருப்பவர் மார்ட்டின் எட்டி மோர்டன்சென் என்பவர் தான்.
அடுத்தது “லிவ் டைலர்” அமெரிக்க சினிமா ரசிகர்களால் பைத்தியமாக நேசிக்கப் படும் நடிகை இவர். சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவரது பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயராக குறிப்பிட பட்டிருந்தது டான் ரன்ட்ரென் என்பதாகும். ஆனால் பல வருடங்கள் கழித்து இவரது உண்மையான தந்தை ஏரோ ஸ்மித் இசைக்குழுவில் இருந்த இசைக் கலைஞரான டைலர் பேகன் என்பது தெரிய வந்தது. அதன் பின்பு தனக்கு ஏற்பட்ட அவமானங்களே இன்று தன்னை வாழ வைப்பதாக லிவ் டைலர் தெரிவித்துள்ளார்..!!