ஆண்களே உங்கள் விந்தணுவில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.? தயக்கத்தை விட்டுவிட்டு உடனடியாக வைத்தியரை நாடுங்கள்… இது உயிர் ஆபத்தை ஏற்படுத்துமாம்..!!
நோய்கள் என்பது யாருக்கு எப்போது வரும் என எம்மால் கூற முடியாது, ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள் கூட திடீரென இறந்து விடுகின்றனர், என்னாகிற்று என்று கேட்டால் ஏதேனும் ஒரு நோயை கூறுகின்றனர். நோய் வந்தபின் அல்லது அந்த நோய் எம்மை மரணம் வரை அழைத்துச் சென்றபின் அது பற்றி பேசுவதை விட வரும்முன் காப்பது சிறந்த விடயமாகும்.
இன்று நாம் பார்க்கப் போவது ஆண்களுக்கு ஏற்படும் சில நோய்கள் பற்றிய அறிகுறிகளாகும். குழந்தை ஆசை திருமணமான ஆண் பெண் இருக்கவருக்கும் இருக்கும் முக்கியமான ஆசையாகும். ஆனால் திருமணம் முடிந்தவுடன் சிலரது இந்த குழந்தை ஆசை நிறைவேறுவதில்லை.
குழந்தை இல்லை என்றதும் உடனடியாக அனைவரின் பார்வையும் பெண்கள் மீது திரும்பி விடும், ஆனால் குழந்தை இல்லாத பிரச்சனைக்கு அதிக காரணமாவது ஆண்கள் தான், ஆண்களின் விந்தணு பிரச்சனைகளால் தான் இந்த குழந்தை இன்மை ஏற்படுகிறது. ஆரோக்கியமான விந்தணு என்பது வெள்ளை நிறத்தில் இருப்பதாகும், ஆனால் பலருக்கு மஞ்சள், நிறத்திலும் சிலருக்கு பச்சை நிறத்தில் கூட வெளியே வருகிறது.
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலை இருக்கும் ஆண்களுக்கு மஞ்சள் நிறத்தில் விந்தணு வெளியாகும். இந்த மஞ்சள் நிற விந்தணு மஞ்சள் காமாலையினால் தான் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள சில அறிகுறிகள் இருக்கும், அவை காய்ச்சல், ஆண் உறுப்பு பகுதி வலி, உறவில் ஈடு பட முடியாத அளவிற்கு வலி, சிறு நீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுதல், பலவீனமான விந்தணு போன்றவை அறிகுறிகளாகும்,
இவை இருந்தால் உடனடியாக வைத்திய சாலை சென்று விடுங்கள், அடுத்து விந்தணு பச்சை நிறத்தில் வெளியேறுகிறது என்றால் புரோஸ்டேட் தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தமாகும், இது மிக ஆபத்தான நோயாகும், இதன் அறிகுறிகளாக முதுகு வலி, விந்து வெளியேறும் போது தாங்க முடியாத வலி, தடிப்பமான சிறுநீர் போன்றவையாகும்,
அடுத்து சிறுநீரில் விந்தணு, இது தற்போது பல இளைஞர்களுக்கு இருப்பதாக வைத்திய ஆய்வில் வெளியாகி உள்ளது, தகாத உறவு, பல முறை உறவு போன்றவற்றால் இது ஏற்படுகின்றது… இவை அனைத்துமே ஆண்களுக்கு ஆபத்தானவையே.. மஞ்சள் நிற விந்தணு மேல் குறிப்பிட்ட அறிகுறிகள் இன்றி ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் இருந்தால் பயப்படும் அவசியம் இல்லை.
அதற்கு மேல் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். தற்போது அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு அதனால் இந்த அறிகுறிகள் இருந்தால் தயக்கத்தை விட்டுவிட்டு வைத்தியரை நாடுங்கள்..!!