சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் உலக நாடுகளுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
சீனாவின் ஹவுன் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இடையில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல உயிர்களை சர்வதேச நாடுகள் இழந்து நிற்கின்றன. தற்போது வரை 27,365 உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பொருளாதாரத்தில் பாரியளவிலான சரிவை சந்தித்துள்ளன.சர்வதேச சந்தைகள் முடங்கிப் போயுள்ளன.
இந்நிலையில், சீன ஜனாதிபதி தற்போது உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ”பெரும் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே மந்தகதியிலுள்ள சூழலில், உலகின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். உலகளாவிய சந்தையுடைய விநியோகச் சங்கிலியின் ஸ்திரத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜி20 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு வீடியோ வாயிலாக நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சீன உறுப்பினரிடம் கட்டணங்களைக் குறைத்தல், தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் போன்றவற்றை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் இறக்குமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்தவும் சார்பு நிதிக் கொள்கையை அமல்படுத்த ஊக்குவிக்கவும் சீனா தயாராக உள்ளது” என்றும் ஜி ஜின்பிங் கருத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.