சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு..!!
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் மலை, உலகின் 8ஆவது அதிசயம் என்று புகழப்படும் முதல் கின் பேரரசரின் கல்லறை, பாண்டா ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல இடங்களில் கடுமையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வேண்டும், பாதுகாப்பு கவசங்கள்அணிந்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.