சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு..!!
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்துக்கும் அதிகமானோரில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்டதாகவும், அப்போது காரணம் புரியாத நிமோனியா என அது அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும் அதற்கான மூலத்தை தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 81,708 பாதிக்கப்பட்ட நிலையில் 3,331 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 77,078 குணமடைந்து அனுப்பப்பட்டதாகவும் 1,299 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.