ஸ்ரீலங்கா – நீர்கொழும்பில் சற்றுமுன் கலவரம்.!
ஸ்ரீலங்காவின் நீர்கொழும்புப் பகுதியில் 05.05.2019 – ஞாயிறு அன்று மாலை இடம் பெற்ற அசம்பாவிதமானது, கலவரமாக மாற்றம் பெற்றது. இந்த கலவரத்தினை அடுத்து இப் பிரதேசத்தைச் சூழ உள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவு பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களை அடுத்து, உடனடி செய்தித் தணிக்கை அமுலுக்கு வர வேண்டும் என இலங்கை பாதுகாப்பு ஊடகப் பிரிவு அறிவித்தல் விடுத்திருந்தது. தென்னிலங்கையில் சமூக வலைத் தளப் பாவனையினை மீண்டும் தடை செய்தது அரசு.