கொரோனா வைரஸின் உண்மை தன்மையை மறைத்த சீனா..! உண்மையை போட்டுடைந்த ஹாங்காங்..! வைரலாகும் தகவல்..!!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் சீனா பல விடயங்களை மறைப்பதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தைபே, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உட்பட சுமார் 35 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இதனை கட்டுப் படுத்த பலரும் முயன்று வருகின்றனர்.
இது குறித்து சீனா அரசு வெளியிட்ட தகவலில் இது வரை 320 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 14500 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஹாங்காங் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. சீனாவில் சுமார் 75000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் பலருக்கு வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சீனாவின் வுகான் நகரில் அனைத்து குடும்பங்களிலும் கொரோனா தொற்று உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்களுக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை. குடும்பத்தில் ஒருவர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வெளியே சென்று உணவு பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் நடத்திய ஆய்வில் சுமார் 75000 பேர் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சீனா இதனை மறைக்கிறது. தற்போது பல நாடுகள் சீனர்கள் வருகையை தடை செய்துள்ளது. இதனால் தான் சீனா பொய் கூற ஆரம்பித்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்..!!