பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு கொடூரமான முறையில் மகள்கள் கொடுத்த தண்டனை .!! வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!!
படுக்கையறையில் தந்தையை மகள்களே கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் ரஸ்யாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. போதைக்கு அடிமையாகி இருந்த தந்தை தாயை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பின் மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். கிரிஸ்டினா, ஏஞ்சலினா, மரியா, என்கிற முறையே 19,18,17 வயது பெண்களே தங்கள் தந்தையை 39 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தனர்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலீஸார் விசாரணை செய்த போது குறித்த நபர் சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தாயார் வீட்டை விட்டு வெளியே சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தந்தை பல வருடங்களாக மூவரையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார்.
பொறுமையாக இருந்த மகள்கள் மூவரும் இணைந்து தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் காயத்தில் மிளகாய் தூள் போட்டு துன்புறுத்தி உள்ளனர். இந்த வழக்கில் பெண்கள் மூவருக்கும் சிறை தண்டனை வழங்க வேண்டுமென பெண்கள் மீது வழக்கு தொடுத்தவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ரஸ்யாவை சேர்ந்த ஏராளமான மக்கள் மூன்று யுவதிகளுக்கும் தண்டனை வழங்க கூடாதென போராட்டங்கள் நடத்தினார்கள்.
தற்பாதுகாப்பிற்காக பெண்கள் தந்தையை கொலை செய்தார்கள், அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென கையொப்பம் இட்ட மனு ஒன்றையும் அளித்திருந்தார்கள். இந்த நிலையில் வழக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சகோதரிகள் மீது வழக்கு தொடுத்த நபர் வழக்கை கைவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பெண்களுக்காக வாதடி வந்த வக்கீல் அலெக்ஷி பார்சி சகோதரிகள் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்..!!