கொரோனா வைரஸை தொடர்ந்து மக்களை கொன்று குவிக்கும் இன்னுமொரு அபத்தான காய்ச்சல்.! இது வரை 37 பேர் மரணம்..!!
கொரோனா வைரஸை தொடர்ந்து பரவும் ஆபத்தான நோய் தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து வருக் கொரோனா வைரஸ் இலங்கையில் கட்டுப் பாட்டில் உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் எலிக் காய்ச்சல் இருந்து இல்லாமல் போன நிலையில் மீண்டும் கடந்த வருடத்தில் இருந்து இலங்கையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. இந்த எலிக் காய்ச்சலினால் இலங்கையில் இது வரை சுமார் 37 பேர் வரை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையில் இது வரை எலிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அடையாளம் காணப் படாதவர்கள் உள்ள மாவட்டமாக மொனராகல மாவட்டமும், எலிக் காய்ச்சலால் அதிகமானோர் அடையாளம் காணப்பட்ட அதாவது அதிகம் பாதிக்கப் பட்ட மாவட்டமாக இரத்தினபுரியும் பதிவாகி உள்ளது.
இந்த காய்ச்சல் தொடர்பில் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் சுகாதார துறை அறிவித்துள்ளது..!!