உணவு எடுத்துக் கொள்ளும் போது அவதானமாகுங்கள்..!இந்த உணவுகள் சாப்பிடுவது ஆபத்து..!!
பொதுவாக மழைக் காலங்களில் அனேகமான நோய்கள் நம் வாசற்கதவை எட்டிப் பாரக்கத் தொடங்கும். பெரும்பாலான தொற்று நோய்கள் தொடங்கி நுளம்பினால் ஏற்படக் கூடிய நோய்கள் வரை அனைத்துமே மழைக் காலங்களில் ஏற்படுவதற்குப் பல வாய்ப்புக்கள் உள்ளன. அதே வேளை நாம் உண்ணும் உணவுகளும் நமக்குத் தீங்கை ஏற்படுத்தக் கூடியன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆரோக்கிய உணவைத் தேடும் முயற்சியில், ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உணவு ஆரோக்கியமானதல்ல என்பதற்காகத் திடீரென நிறுத்தக்கூடாது.
ஆரோக்கிய உணவு என்பதற்காக அதிகமாக ஒரு உணவையும் சாப்பிடக்கூடாது. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! அந்த வகையில் மழைக் காலத்தில் சில உணவுகள் உண்ணுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். வெள்ளை அரிசி, மழைக்காலத்தில் வெள்ளை அரிசியை சாப்பிடுவது குடலில் வீக்கம் மற்றும் நீர்த்தேக்கம் ஏற்ப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைதல், செரிமான மண்டலத்தில் பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
இந்த காலங்களில் பழுப்பு அரிசி சாப்பிடுவது நல்ல பயனை அளிக்கும்.மீன், இறால், நண்டு, குளிர் காலங்களில் கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது அவைகளின் இனப்பெருக்க காலம் மேலும் இந்த காலத்தில் கடல் உணவுகள் சாப்பிடுவது வயிற்றில் தோற்று நோய்களை உண்டாக்கும் சிலசமயம் விஷமாக மாறக்கூட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் இந்த காலங்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. காரமான பொரித்த உணவுகள், மழை பெய்யும் நேரத்தில் சூடான எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வழங்காது. இதுபோன்ற உணவுகள் உங்கள் செரிமானத்தை பாதிப்பதோடு வயியற்று புண், வீக்கம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
மேலும் இது பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.பழக்கலவைகள், பொதுவாகவே பழச்சாறுகள் ஆரோக்கியமானவைதான். ஆனால் மழைக்காலங்களில் நீங்கள் அவற்றை குடிக்கும் முன் அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெரும்பாலும் வீட்டில் தயாரித்த பழச்சாறுகளை குடிப்பதே நல்லது. தரமில்லாத பழச்சாறை மழைக்காலங்களில் குடிப்பது மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.