இந்த உணவுகள் மிக மோசமான விஷத் தன்மை கொண்டது என்றால் நம்புவீர்களா .? நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருக்கும் விஷங்கள் இதே…அவதானம் மக்களே…!!
உணவுகள் அதிலும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இயற்கையோடு ஒத்துப் போனால் நிச்சயம் நீண்ட நாட்கள் வாழ முடியும் என்பது அனைவரும் அறிந்தது தான். நாம் அறிந்த உணவுகளில் அறியாத நிறைய விடயங்கள் உள்ளது அதை தான் இன்று பார்க்கப் போகிறோம்.
உணவுகள் எல்லாமே உடலுக்கு நல்லது தான் அளவோடு உண்ணும் வரை. ஏற்கனவே நாம் ஒரு நாளைக்கு 4 பாதாம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை என்பதை கூறியிருந்தோம் சிலர் நான்கு பாதாமுக்கு அதிகமாக சாபிட்டால் என்ன நடக்கும் என வினா தொடுத்து இருந்தார்கள், இன்று சில விஷத்தன்மை உள்ள உணவுகளை பார்க்கலாம். முதலில் விளக்கெண்ணெய் பற்றி பேசலாம் இது ஒருவரின் வாழ்வில் பல விதத்தில் உதவுகிறது.
உடலுக்கு, கண்ணுக்கு, ஏன் இதை உட்கொள்ளவும் செய்கிறோம். இதனால் எமக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் இதனை தயார் செய்யும் ஆமணக்கு விதைகள் விஷமானவை, இதனை உண்டால் மரணம் நிச்சயம்.
இதே போல் நாம் ஆப்பிள் சாப்பிடுகின்றோம்
டாக்டர்களும் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என கூறுகின்றனர் ஆனால் ஆப்பிள் பழத்திலும் விஷம் உண்டு அதாவது ஆப்பிள் விதையில் விஷம் இருப்பதாக கூறுகின்றனர், அது மட்டும் இன்றி நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் பல உணவு வகையில் சைனைட் இருகின்றது,
சில நேரங்களில் அவற்றை நாம் உட்கொள்ளும் போது வாந்தி, தலை சுற்று போன்றவை ஏற்படுகின்றன.. இது தொடர்பாக இன்னும் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை பாருங்கள் பயனுள்ளதாக இருந்தால் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!