இலங்கையில் இராணுவச் சிப்பாயால் மரணவீட்டில் நடந்த மரணம்
மரண வீடொன்றில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் அடிதடியில் முடிந்ததால் தாக்கப்பட்ட நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் கொஸ்லாந்தை நிக்கபொத்த கிராமத்தில் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
நிக்கபொத்த கிராமத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய ஏ.கே.எலிஸ் நோனா என்ற வயோதிபப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாய்த்தர்க்கம் மோதலாகி ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டு அதே இடத்தில் மரணமானார். அதே கிராமத்தைச் சேர்ந்த நாற்பது வயது நிரம்பிய சிசிர சமிந்த குமார என்பவரே மரணமானவராவார்.
இந்த மரணம் குறித்து கொஸ்லாந்தைப் பொலீசார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன் மரணமானவரை பொல்லால் தாக்கியவர் பற்றியவிசாரணை மேற்கொண்ட போது விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த இராணுவச் சிப்பாயே தாக்கியவர் எனக் கண்டறிந்து அவரைக் கைது செய்தனர்.