இலங்கையில் பல பெற்றோர் இரவு பகல் பாராது பிள்ளைகளுடன் பாடுபட்டதன் பலன் நாளை தெரியவருகின்றது.
2018ம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இம்மாதம் ஜந்தாம் திகதி வெளியிடப்படவுள்ளதாக இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆவணி மாதம் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை நாடெங்கிலும் நடைபெற்றது. குறித்த பரீட்சையில் ழூன்று இலட்சத்து இருபத்தாறு மாணவர்கள் தோற்றியிருந்தனர். நாடளாவிய ரீதியில் மூவாயிரத்து ஜம்பது பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைய வேண்டி இரவு பகல் பாராது பிள்ளைகளை கற்றலுக்கு அனுப்பிவைத்ததன் பலனை அறியும் நாளை எதிர்பார்த்த பெற்றோர் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பாக நோக்கப்படுவது தரம் – 5 மாணவர்களுக்கு நடைபெறுகின்ற புலமைப் பரிசில் பரீட்சை ஆகும்.