இது ஆபத்தான மருந்து, இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதை மருத்துவர்கள் உடனே நிறுத்துங்கள்…! கனேடிய மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மலேரியாவிற்கு பயன்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீள முடியும் என கூறி இருந்ததை தொடர்ந்து வைத்தியர்களும் இந்த மருந்தை மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்தனர்.
ஆனால் இந்த மருந்தை வைத்திய ஆலோசனை இன்றி எடுத்துக் கொண்ட சிலர் மரணமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் கனடா வைத்தியர்கள் இது தொடர்பான ஆய்வுகளை மேட்கொண்டனர். இதன் முடிவு விபரீதமாக உள்ளதாக கனேடிய மருந்தியல் நிபுணர் டாக்டர் David Juurlink தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர் கொரோனாவால் பாதிக்கப் பட்ட 36 நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்தோம். அதன் போது இது ஆபத்தானது என்பதை உணர முடிந்தது. கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தும் போது இரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் இதய துடிப்பில் பிரச்சனை ஏற்படுகிறது. அது மட்டும் இன்றி மனோவியல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.
அதனால் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதை மருத்துவர்கள் நிறுத்த வேண்டும். இது பின் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். இது குறித்து கனேடிய தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் Theresa Tam கூறுகையில் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இருக்கின்றதா என பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொடுக்க கூடாது மலேரியா மருந்தை அறிவியில் ஆதாரம் இல்லாமல் கொடுப்பது தவறாகும் என தெரிவித்துள்ளார்..!!
URGENT / PLEASE SHARE:
Hearing reports of fatalities among people using chloroquine-containing aquarium products to treat or prevent COVID-19
** PLEASE DO NOT DO THIS **
Chloroquine is extremely dangerous in overdosehttps://t.co/PpAH8BOmxQ
— David Juurlink (@DavidJuurlink) March 23, 2020