முத்தங்கள் வேண்டாம்; உமிழ் நீர் படாமல் பார்க்கவும்!
உலகம் பூராகவும் பெரும் பீதியைக் கிளப்பியுள்ள கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை எனவும், குறித்த வைரஸ் தொற்றக்கூடிய செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் துறை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முத்தம் கொடுத்தல், உமிழ் நீர் பராமல் பார்த்தல் மற்றும் ஒவ்வொருவருக்கிடையில் குறிப்பிட்டளவு இடைவெளி என்பவற்றைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, முகக்கவசம் தேவைப்படுவோர் மாத்திரமே அதைப் பயன்படுத்த வேண்டும் எனவும், வைரஸ் பாதித்தவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரியுள்ள அவர், ஒரு கவசத்தை எட்டு மணித்தியாலங்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.