உங்கள் கண்கள் அழகாகவும் மற்றவர்களை கவர்வது போலவும் இருக்க வேண்டுமா.? இப்படி செய்யுங்கள் போதும்..!!
வீட்டு வேலைகளைச் செய்த முகம் எல்லாம் களையிழந்து இருக்கின்ற நிலையில் முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலே அதை செய்துவிடலாம்..!ஈசியான முறை தான் பணம் தேவையில்லை .
வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவதும் ‘லிக்யூட் சோப் பூசி, ‘பாடி ஸ்கிரப்’ பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.
கண்கள் அழகாக டீ பேக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.
தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபேக்கிற்கு இருக்கிறது.
பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கியூப்பை மஸ்லின் துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கியூப்பை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் ஆயிலில் முக்கி, பரு மீது வையுங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.