திருமணமாகி ஒரு வருடத்தில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண்..! பின் நடந்த விபரீதம்..!!
திருமணமனமாகி ஒரு வருட நிறைவு நாளில் மனைவியின் கழுத்தை செல்போன் சார்ஜர் வயரால் நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன் தொடர்பான வெளியாகி அதிர வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகார் நகரை சேர்ந்தவர் பைசன். இவருக்கு அதே இடத்தை சேர்ந்த ஷப் நுர் என்ற 21 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடித்து ஒருவருட நிறைவு நாளான நேற்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பைசன் ஷப்பின் கழுத்தை வயரால் நெரித்து கொலை செய்துவிட்டு நேரடியாக புகையிரத நிலையம் சென்று ரயிலில் ஏறியுள்ளார். வேகமாக சென்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து குதித்த பைசன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இருவரது சடலங்களும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலை அனுப்பப் பட்டுள்ள நிலையில் பைசனின் தந்தை இது பற்றி கூறுகையில். ஷப் வரும் போது நல்ல பிள்ளையாக தான் வந்தாள். ஆனால் அதிக நேரம் மொபைலில் வீடியோ பதிவேற்றுவது, சமூக வலைத்தளத்தில் இருப்பது என அதிகரித்து ஏராளமான ஆண்களுடன் பேச ஆரம்பித்தார். இது பைசனுக்கு தெரிய வந்தபோது கண்டித்தார்.
ஆனால் ஷப் விடுவதாக இல்லை. இதனால் அவருக்கு தெரியாமல் கால் ரெகோர்டிங் ஆப்ஸ் ஒன்றை பைசன் ஷப் மொபைலில் டவுன்லோட் செய்து வைத்தார். பின் அதனை கேட்ட போது பல ஆண்களுடன் தகாத முறையில் ஷப் பேசியது தெரியவந்தது. ஆனால் இரு வீட்டாரும் பேசி அதனை முடித்துவிட்டோம். இதனால் இன்னுமொரு பிரச்சனையை ஆரம்பித்த ஷப் தினமும் மாமிச உணவுகள் வேண்டும் என அடம்பிடித்தார்.
இதனால் பிரச்சனைகள் அதிகரித்தது. திருமண நாள் அன்றும் பரிசு தரவில்லை என சண்டை நடந்தது. வழமையான சண்டை என்பதால் கண்டுகொள்ளவில்லை, எங்கள் மகன் பொருமையானவர். எப்படி செய்தார் என தெரியவில்லை என கூறியுள்ளார். தற்போது எங்கள் மகனை இழந்துவிட்டோம் என கூறியுள்ளார். பொலீஸார் தொடர்ந்து விசாரணையை மேட்கொண்டு வருகின்றனர்..!